தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன் தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் தற்போது ஹிப்ஹாப் ஆதி தமிழா நடித்துள்ள பிடி சார்ப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் நடிகை அனிகா பிடி சார் படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்து கொண்ட போது பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சினை குறித்து பேசினார். இது குறித்து அவர் பேசியதாவது, பிடி சார் படத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி பேசியுள்ளனர். அதாவது  பேருந்தில் பெண்கள் செல்லும் போது தவறான நோக்கத்தில் தொடுவார்கள். டார்ச்சர் பண்ணுவாங்க. தினசரி இந்த மாதிரியான விஷயங்கள் நடந்து வருகிறது. ஆனால் எனக்கு இதுபோன்று ஒருபோதும் நடந்ததில்லை. மேலும் நான் எப்போதும் என் அம்மாவுடன் தான் பயணிப்பேன் என்று கூறியுள்ளார்.