
சில்ஹெட்டில் நடைபெற்ற வங்கதேச A மற்றும் நியூசிலாந்து A அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியில், அரிதான மற்றும் வியக்கத்தக்க நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதாவது வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் நூருல் ஹசன், பந்து வீச்சாளர் எபாடோட் ஹொசைனின் பந்துகளை அடிப்பதற்கு பதில், வழக்கமான நிலைப்பாட்டைவிட முதல் ஸ்லிப் பகுதியில், ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியே நின்று பந்தை அடிக்க முயன்றார். ஆனால் பேட்டர் டேல் பிலிப்ஸ், அந்த பந்தை ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியே விட்டதும், பந்து நேராக நூருலின் பின்னால் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டில் பாய்ந்தது.
இந்தச் சம்பவம், MCC விதிமுறை 28.3.2-ன் படி, விளையாட்டின் போது பந்து பாதுகாப்பு சாதனங்களைத் தாக்கினால், பந்து உடனடியாக டெட் ஆகும், மேலும் அந்தச் சம்பவத்திற்காக எதிரணி அணிக்கு 5 பெனால்டி ரன்கள் வழங்கப்பட வேண்டும். இதன்படி, நடுவர் தனது தோளில் கையைத் தட்டுவதன் மூலம், நியூசிலாந்து A அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படுவதை அறிவித்தார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ONE OF RARE SCENES. 🤯
– A Bangladeshi bowler’s ball straight hit the wicketkeeper’s helmet due to which 5 penalty runs were given. pic.twitter.com/JcWJfPayMG
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 12, 2025
இது, கிரிக்கெட் வரலாற்றில் அரிதாகவே பதிவாகும் சம்பவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோ கிளிப்புகள் வைரலாக பரவி வருகிறது. இந்த வகை வினோதங்கள், கிரிக்கெட் என்ற விளையாட்டின் மறுபக்கங்களையும், அதன் விதிமுறைகளின் நுணுக்கத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.