ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். தற்பொழுது மாமியார் மற்றும் மருமகளை அழைத்து விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஏழு வருடத்திற்கு முன்பு தன்னுடைய பிரசவத்தில் மாமியார் நடந்து கொண்ட விதத்தை மருமகள் ஒருவர் பேசியிருக்கிறார் பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதால் மருத்துவமனை வரை வந்த மாமியார் தன்னுடைய மருமகளையும் குழந்தையும் பார்க்கவில்லையாம்.