
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இன்று மதியம் 1:38 மணிக்கு சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், 1:40 மணிக்கு விமான நிலைய எல்லையை கடக்கும் முன்பே விபத்துக்கு உள்ளானதாக தகவல் வெளியானது.
விமானத்தில் 242 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் என மொத்தம் 252 பேர் பயணம் செய்துள்ளனர். மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Air India B787 Dreamliner aircraft, AI 171 crash, list of passengers pic.twitter.com/i5pkC3QYRm
— IANS (@ians_india) June 12, 2025
பயணியர் பட்டியலில், குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி என்பவரும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது இருக்கை எண் 2D ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகளின் தேசிய அடையாள விவரங்களின்படி, விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் குடிமக்கள், 7 போர்த்துகீசியர்கள் மற்றும் 1 கனடா குடிமகன் இருந்ததாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் பற்றி தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை.