
சீனாவின் தெற்கு மாகாணங்களான ஜெஜியாங், சிச்சுவான் மற்றும் ஃபுஜியான் மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள், வெயிலின் தீவிரம் மற்றும் அதனால் ஏற்படும் தோல் கருமத்தைத் தவிர்க்க தாமரை இலைகளை முகக்கவசமாக பயன்படுத்தும் புதிய முயற்சியை செய்து வருகிறார்கள்.
சாலையோரக் குளங்களில் இருந்து பறிக்கப்படும் பெரிய தாமரை இலைகளை முகத்தை முழுவதும் மூடும்படி கவசமாக மாற்றி, தொப்பி அல்லது ஹெல்மெட் உதவியுடன் கட்டிப் பிணைத்துள்ளனர். கண்கள் மற்றும் மூக்கு வழியாக சுவாசிக்க சிறிய துளைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பேஷன் முகமூடியே போல் தோற்றமளிக்கும் இந்த தாமரை இலை முகக்கவசம், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஃபுஜியான் மாகாணத்தை சேர்ந்த யின் என்ற நபர், “நான் அழகான முகமூடி போடலாம்னு இருந்தேன்… ஆனா என் வீட்டுக்கு அருகில இருக்கற தாமரை இலைய பாத்ததும் அதை பயன்படுத்தினேன். என் முகம் மட்டும் வெயிலில் கருக்கவில்லை. இது நல்லா வேலை செய்துச்சு!” என கூறியுள்ளார்.
சிலர் “கார் அல்லது பைக்கில் இதை போட்டுச்சென்றால் அபாயம் ஏற்படும். தாமரையின் தண்டு மற்றவர்களைக் காயப்படுத்தலாம்” என ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலாக, சிலர் தார்பாலின், தொப்பி, மின்விசிறி உடை (fan jacket) அல்லது முடியை முழுக்க முகத்தில் கீழே கம்பி போன்று இறக்கி மூடியதாகக் காணப்படும் வீடியோக்களும் பகிரப்பட்டுள்ளன.