ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய விவகாரத்தில்  பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக காலில் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கியுள்ளார் சுதாகர் .

சிறையில் உள்ள அவர் மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் அடிப்படியில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.