பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவருடைய மகன் ஆரியன் கான் கடந்த 2021-ம் ஆண்டு சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றதிற்காக கைது செய்யப்பட்டார். இது நடிகர் ஷாருக்கானுக்கு பெரும் தலைவலியாக அமைந்த நிலையில், போதை பொருள் வழக்கிலிருந்து ஆரியன் கான் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஆரியன் கான் நடிகராக அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.

இது குறித்து ஆரியன் கான் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆரியன் கான் தற்போது அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது ஆரியன் கான் தன்னுடைய குடும்பத்துடன் புத்தாண்டை துபாயில் கொண்டாடியுள்ளார். அங்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடிகை சாடியா கானுடன் ஆர்யன் கான் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை முதலில் சாடியா கான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், தற்போது ஆர்யன் கானும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாடியாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.