
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அரசியல் தலைவர்களும் திரையுலகையைச் சேர்ந்தவர்களும் சோசியல் மீடியா பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் இந்து முஸ்லிம் இடையேயான பிரச்சினை கிடையாது.

ஆனால் அதைத்தான் வெறுப்பாளர்கள் விரும்புகிறார்கள். அங்கு நடந்தது பயங்கரவாதத்திற்கும் மனிதநேயத்துக்கும் இடையேயான மோதல். ஒரு பெயரின் அடிப்படையில் யாரையும் பிரிக்க வேண்டாம்.
பிரிவினை எப்போதும் பயத்தையும் அதிக எதிர்ப்பு உணர்வை மட்டுமே உருவாக்கும். ஆனால் நாம் ஒரே இனம் என்று உணர்வு இருக்க வேண்டும். நாம் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது ஒன்றுபட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.