இந்தோ திபெத் எல்லை காவல் படையில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 125 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 18 முதல் 23 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.