புனே நகரில் பிஎம்டபிள்யூ காரில் சென்ற சௌரப் அஹூவா என்ற வாலிபர் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே சாலையில் திடீரென சிறுநீர் கழித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது புனே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அஹூவா மற்றும் அவருடைய நண்பர் பக்யேஸ் ஓஸ்வால் இருவரும் மது குடித்துக் கொண்டே வாகனம் ஓட்டியது மற்றும் நடு ரோட்டில் சிறுநீர் கழித்தது தெரியவந்தது. இந்த வாலிபர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில் சிறுநீர் கழித்த அந்த வாலிபரை மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.