
கேரள மாநிலத்தில் உள்ள காஞ்சிரா மட்டம் பகுதியில் ரேஷ்மா என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு பஞ்சாயத்து உறுப்பினருடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் தன்னுடைய நண்பர் ஒருவரது வீட்டில் திருமணத்திற்கு முந்தைய நாள் ரேஷ்மாவை தங்க வைத்தார். அப்போது அவரது நண்பருக்கு ரேஷ்மாவை பற்றிய சில விவரங்கள் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் திருமணத்திற்காக அலங்காரம் செய்ய ரேஷ்மா பியூட்டி பார்லருக்கு சென்றார். அப்போது அவரது உடைமைகளை பஞ்சாயத்து தலைவரும் அவரது நண்பரும் சேர்ந்து சோதித்த போது ஏற்கனவே ரேஷ்மாவுக்கு திருமணமான சில ஆவணங்கள் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்த நிலையில் பியூட்டி பார்லருக்கு சென்று விட்டு திரும்பிய ரேஷ்மாவை அவர்கள் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. அதாவது கடந்த 45 நாட்களுக்கு முன்பாக தான் ஒருவரை ரேஷ்மா திருமணம் செய்த நிலையில் பின்னர் பஞ்சாயத்து தலைவரை திருமணம் செய்ய தயாராகியுள்ளார். அதுமட்டுமின்றி அடுத்த மாதம் வேறொருவரை திருமணம் செய்ய பேசி முடித்து வைத்ததும் தெரியவந்துள்ளது.
அவர் ஆன்லைனில் விளம்பரப்படுத்தியும் திருமண பந்தங்கள் குறித்து விசாரித்தும் இதுபோன்று பத்து பேரை திருமணம் செய்தது தெரிய வந்தது. இவர் பல்வேறு கதைகளை கூறி பத்துக்கும் மேற்பட்டோரை திருமணம் செய்து பணம் பறித்தது தெரியவந்த நிலையில் தற்போது அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.