
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் நாளை பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் இறுதி போட்டி நடைபெறுகிறது.
இரு அணிகளும் சிறப்பான நிலையில் இருக்கும் நிலையில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது.
இந்நிலையில் நாளை நடைபெறும் ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது திடீரென மழை பெய்தால் எந்த அணிக்கு கோப்பை கிடைக்கும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
அதாவது நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் போட்டியின் போது மழை பெய்த நிலையில் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் மழை பொழியாததால் போட்டி தொடர்ந்து நடைபெற்றது.
இதேபோன்று ஒருவேளை நாளை நடைபெறும் போட்டியிலும் மழை பெய்தால் ஐபிஎல் இறுதிப்போட்டி விதிகளின் படி ரிசர்வ் டே உள்ளது. நாளை போட்டியின் போது மழை பெய்தால் 120 நிமிடங்கள் போட்டி ஒத்தி வைக்கப்படும்.
தொடர்ந்து மழை பெய்தால் போட்டியின் ஓவர்கள் குறைக்கப்படும். இறுதிப் போட்டி ஐந்து ஓவர்கள் வரை சுருக்கப்பட்டு அப்படியும் மழை பெய்தால் போட்டி மறுநாள் தள்ளி வைக்கப்படும்.
ரிசர்வ் டேவிலும் இதே போன்ற நடைமுறைகள் தான் பின்பற்றப்படும். அப்படியும் மழை குறுக்கிட்டால் சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்படும். இந்த சூப்பர் ஓவர் டிராவானால் மீண்டும் சூப்பர் ஓவர் நடத்தப்படும்.
ஒருவேளை மழை பாதிப்பால் சூப்பர் ஓவர் கூட நடைபெறாத முடியாத சூழல் ஏற்பட்டால் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு கோப்பை கிடைக்கும்.
மேலும் அப்படி பார்த்தால் ரன் ரேட் அடிப்படையில் தற்போது பஞ்சாப் அணிதான் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. எனவே பஞ்சாப் அணிக்கே கோப்பை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.