ஐபிஎல் 2025 தகுதிச் சுற்று 2 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இந்த பரபரப்பான போட்டியில், பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். பஞ்சாப் அணி நாளை நடைபெறும் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த வெற்றியின் நடுவே, பஞ்சாப் வீரர்கள் ஒருசேர மகிழ்ச்சியில் களத்தில் வெள்ளம் போல் திரண்டு கொண்டாடிக் கொண்டிருந்தபோது, ஒரு தருணம் சிறு விவாதத்துக்கு வழிவகுத்தது. அதாவது 17வது ஓவரில் ரன் அவுட் ஆன ஷஷாங்க் சிங்கின் தவறான முடிவால், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் போட்டியை சற்று கையாள முடியாத ஆவேசத்தில் அவரை மைதானத்தில் கண்டித்தார். ஹார்டிக் பாண்ட்யா வீசிய நேர்த்தியான பந்தில், ஷஷாங்க் டைவ் செய்வதற்குப் பதிலாக சாதாரணமாக ஓடியதால் தவறி ஸ்டிரைக்கரின் முனையிலிருந்து ரன் அவுட் ஆனார்.

 

அச்சமயம் பஞ்சாப் அணிக்கு அதிரடியான ரன்கள் தேவைப்பட்டது. ஷஷாங்க் வெறும் 2 ரன்களில் வெளியேறியதற்கான உணர்ச்சி, அவர் முகத்தில் தெரிந்தது. அவரது தவறால் குழப்பம் ஏற்பட்ட போதிலும், அவர் அமைதியாக வெளியேறினார். போட்டியின் முடிவில் அனைத்து வீரர்களும் வெற்றி களைப்பில் இருந்தபோது ஷஷாங்க் சிங்கை ஸ்ரேயாஸ் ஐயர் கடிந்து கொண்டார். அவரை கோபத்தோடு திட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த தவறு பஞ்சாப் அணியின் வெற்றியை பாதிக்கவில்லை என்றாலும் அவர் செய்தது தவறு என்பதால் ஸ்ரேயஸ் ஐயர் அதனை சுட்டிக்காட்டி கோவப்பட்டதாக கூறப்படுகிறது.