குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமான புறப்பட்ட 10 நிமிடங்களில் மருத்துவக் கல்லூரியில் விடுதியில் விழுந்ததால் பயங்கர விபத்து ஏற்பட்டது. அந்த விமானம் வெடித்து சிதறியதில் அதில் இருந்த 204 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 55 பேர் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர்கள். அதன்பிறகு 41 பேர் பலத்த காயங்கள்உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை அகமதாபாத் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் விழுந்ததால் 20 டாக்டர்கள் வரை உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் ஏராளமான மாணவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்னும் முழுமையான உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த விமானத்தில் சென்ற குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி (68) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் விமான விபத்தில் 242 பயணிகளும் உயிரிழந்தது நாட்டையே உலுக்கிய சோகமாக மாறி உள்ளது.