
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயதான சட்ட கல்லூரி மாணவி ஒருவர் முன்னாள் மாணவர் மனோஜித் மிஸ்ரா மற்றும் கல்லூரியில் தற்போது படிக்கும் இரண்டு மாணவர்கள் ஆகியோர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி வளாகத்தில் வைத்து இரவு 7:30 மணியிலிருந்து இரவு 10.50 மணி வரை 4 மணி நேரத்திற்கு மேலாக அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது பற்றி பாதிக்கப்பட்ட மாணவி கூறும் போது ஹாக்கி மட்டையால் முதலில் தலையில் அடித்துள்ளனர். பின்னர் அந்த மாணவிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உதவி கேட்ட நிலையில் மெடிக்கலில் இருந்து இன்ஹலர் வாங்கி கொடுத்து அதன் பிறகு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அந்த மாணவி அவர்களின் காலை பிடித்து கெஞ்சி தன்னை விட்டு விடும்படி கூறியும் அவர்கள் அதனை கேட்காமல் மிரட்டி உன் காதலனை கொன்று விடுவேன் எனக்கூறி பலாத்காரம் செய்துள்ளனர். அந்த மாணவியை பலாத்காரம் செய்ததை செல்போனில் அவர்கள் வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதில் கைதான மனோஜித் மிஸ்ரா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி செயலாளர் ஆவார். இவருடன் சேர்ந்து அந்த கல்லூரியில் தற்போது படிக்கும் ஜைப் அகமது (19), பிரமீத் முகர்ஜி (20) ஆகியோர் மாணவியை வன்கொடுமை செய்த நிலையில் இவர்கள் அனைவரையும் தற்போது போலீசார் கைது செய்ததோடு அவர்களின் செல்போனை பதிவுகள் செய்து தடவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த வழக்கில் கல்லூரியின் பாதுகாவலரான பினாகி பானர்ஜி (55) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதன் காரணமாக மொத்தமாக போலீசார் இந்த வழக்கில் நான்கு பேரை கைது செய்துள்ள நிலையில் இந்த விவகாரம் கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஆர்ஜி கார் மருத்துவமனையில் படிக்கும் மருத்துவ மாணவியை சஞ்சய் ராய் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் சட்டக் கல்லூரி மாணவி இது பற்றி கூறும் போது அந்த மாணவர்கள் பாதுகாவலரின் அறைக்கு வலுக்கட்டாயமாக மாணவியை இழுத்துச் சென்று பலாத்காரம் செய்த நிலையில் அவரும் உதவி செய்ய முடியாத நிலையில் இருந்ததாக மாணவி கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆளும் கட்சி மீது தற்போது பாஜக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்த வழக்கில் மூவரும் தற்போது கைது செய்யப்பட்டு, ஜூலை 1 வரை காவல்துறையின் பிடியில் வைக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ பரிசோதனையில், மாணவியின் கழுத்து, மார்புப் பகுதி மற்றும் உடல் முழுவதும் கடிவெட்டு, நகம் கீறல் மற்றும் கட்டாயமாக உடலுறவு நடந்த சாட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் போலீசார் கூறியதாவது, “தாக்குதலுக்கு பிறகு உடனடியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதால், மாணவியின் புகாரில் கூறப்பட்ட அனைத்து விவரங்களும் உறுதியாக உள்ளது” என தெரிவித்தனர். மேலும், சம்பவ இடம் பூட்டி வைக்கப்பட்டு, மூவரின் மொபைல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த வீடியோ அல்லது தகவல்கள் மற்றவர்களிடம் பகிரப்பட்டுள்ளதா எனவும் விசாரணை நடக்கிறது. மேலும் தேசிய மகளிர் ஆணையம் தற்காலிகமாக இந்த வழக்கை எடுத்துக்கொண்டு, கொல்கத்தா போலீசிடம் 3 நாளுக்குள் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.