செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை சேர்ந்தவர் விமல்(22). இவரது நெருங்கிய நண்பர் ஜெகன்(23). நேற்று இரவு விமலும், ஜெகனும் காந்திநகர் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் கோபமடைந்த 3 பேர் விமலையும் ஜெகனையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த விமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த ஜெகனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகனும் உயிரிழந்தார்.

இருவரது உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜெகன் மற்றும் விமல் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.