
காஞ்சிபுரம் மாவட்டம் கிளியூர் கிராமத்தில் இருக்கும் குளத்தில் நேற்று முன்தினம் வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் நரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ்(25) என்பது தெரியவந்தது. அதே கிராமத்தில் வசிக்கும் சட்டக் கல்லூரி மாணவனான பிரகாஷ்(29), கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி(22) ஆகிய இருவரும் சுபாஷை அழைத்து சென்றது தெரியவந்தது.
அவர்களை பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் சுபாஷ் பிரகாஷின் தங்கையை காதலித்து வந்துள்ளார். அதன் பிறகு ஒரு சில காரணங்களால் காதல் முறிவு ஏற்பட்டது. இருப்பினும் சுபாஷ் தொடர்ந்து தனது காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தொந்தரவு அளித்துள்ளார்.
இதை பிரகாஷ் பலமுறை எச்சரித்தும் சுபாஷ் கண்டு கொள்ளவில்லை. கடந்து சில நாட்களுக்கு முன்பு பிரகாஷின் தங்கையுடன் எடுத்த சில போட்டோக்களை சுபாஷ் வாட்ஸ் அப் உள்ளிட்ட சோசியல் மீடியா தளங்களில் பதிவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் தனது உறவினரான அய்யனார் உடன் சேர்ந்து சுபாஷை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்துள்ளார்.
பின்னர் போதை தெளிய வேண்டும் என்றால் தண்ணீரில் குளித்தால் சரியாகும் என கூறி சுபாஷை குளத்து தண்ணீரில் அழுத்தி மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதனால் பிரகாஷ் அய்யனார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.