மும்பையில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், சீமா கனோஜியா என்ற இன்புளூயன்சர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மழைக்குப் பிறகு அழுக்கு நீர் நிரம்பிய சாலையில், சாலையின் நடுவே படுத்து, நீச்சல் குளத்தில் குளிப்பது போல் நடித்து, ‘ஸ்பபக்-சபக்’ என நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், அவரது செயல்களை பார்த்த மக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் ஆச்சரியத்துடன் நின்று கவனித்தது தெளிவாகப் பதிவாகியுள்ளது. வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், இதை மலிவான பிரபலத்துக்காகச் செய்யப்படும் செயல் எனக் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், சீமாவை, ஏற்கனவே பைத்தியக்காரமான ரீல்கள் மூலம் கவனத்தை ஈர்த்தவர் என நகைச்சுவையுடன் விமர்சிக்கின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Seema Kanojiya (@seemakanojiya87)

சீமா கனோஜியா தற்போது @seemakanojiya87 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 8.5 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்வோர்களைக் கொண்டுள்ளார். அவருடைய இந்த ரீல் வீடியோ தற்போது நெட்டிசன்களின் ஆத்திரத்துக்கும், கலாய்ப்புகளுக்கும் உள்ளாகியுள்ளது. சிலர், “இது போல பொது இடங்களில் செயல் ஆற்றும் நபர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனக் கூற, மற்றவர்கள், “இது சமூகத்தின் தரமுள்ள உருவாக்கங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்” என வருத்தம் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இவ்வாறான அபத்தமான செயல்கள் செய்யும் போக்கு தற்போது பெரிதும் கவலைக்குரியதாகும்.