தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசன் கொக்கைன் பயன்படுத்துவதாக பாடகி சுசித்ரா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது போதைப்பொருள் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இந்த வழக்கில் பிரபலங்கள் சிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் பாடகி சுசித்ரா நடிகர் கமல்ஹாசன் பார்ட்டிகளில் வெள்ளி தட்டில் கொக்கைன் என்ற போதை பொருள் பரிமாறப்படும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோவை இந்து முன்னணி கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது.”கோகைன் கொடுத்தே பெட்ரூம் கூட்டிட்டு போயிடுவாங்க” எனும் சுசித்ராவின் சமீபத்திய நேர்காணல் பார்த்துவிட்டு “யூ டு மாதவன்?” எனக் கேட்கத் தோன்றியது.

மாதவன் ஏன் கோகைன்ஹாசனுடன் நெருக்கமாக இருக்கிறார் என அடியேன் யோசித்ததற்கான விடையும் கிடைத்தது. கமலஹாசன், உதயநிதி, மணிரத்னம், தனுஷ், ஜோசப் விஜய், பெரிய பாய் ஏ.ஆர். ரஹ்மான், விஷால், திரிஷா, விஜய் சேதுபதி, நயந்தாரா, விக்னேஷ் சிவன், சிவ கார்த்திகேயன் என சினிமா உலகத்தையே உரித்து போட்டு விட்டார் இந்த அம்மணி.

இது என்ன கோலிவுட்டா இல்லை கோகைன்வுட்டா என கேட்கத் தோன்றுகிறது. இந்த ‘கோகைன்வுட்’ மாஃபியாவை எதிர்த்து போராடும், சுசித்ராவுக்கும், சின்மயிக்கும் மிகப்பெரும் விருது கொடுக்க வேண்டும். மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும், அர்விந்த சுவாமியும் இந்த கோகைன்வுட்டில் இல்லை என்பது பெரும் நிம்மதியை தருகிறது என்று பதிவிட்டுள்ளார்.