2024 ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் 85 ரன்கள் உடன் மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் களம் இறங்கிய சிவம் துபே, அதிரடியாக அடி பெங்களூரு அணியை நிலை குலைய வைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் எந்த பந்தையும் அடிக்க முடியாமல் அவர் திணறியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

நிறைய பந்துகளை வீணடித்த அவர் 15 பந்துகளில் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். 10 ரன்கள் வித்தியாசத்தில் பிளே ஆப் முன்னேறும் வாய்ப்பை சிஎஸ்கே அணி இழந்ததற்கு அவரின் மோசமான ஆட்டம் தான் காரணம் என்று ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.