தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்க செல்ல விரும்புவார்கள். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே அரசு சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இந்நிலையில் சென்னையில் இருந்து பயணிக்கும் மக்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வரும் அக்டோபர் 24 ஆம் தேதி நாகர்கோவில் – சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதே போல அக்டோபர் 25 ஆம் தேதி சென்னை – நாகர்கோவில் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.