உத்திரபிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்து குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். ஆனால் திருமணமான ஒரு வருடத்தில் விவாகரத்து கூற முடியாது எனக் கூறி குடும்ப நல நீதிமன்றம் அவர்களது வழக்கை தள்ளுபடி செய்தது.

இதனால் அவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தம்பதிக்குள் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் ஒரு வருடத்திற்குள் விவாகரத்து வழக்கு தொடர அனுமதிக்கலாம் என்று கூறியது. மேலும் திருமணமாக ஒரு வருடம் ஆனாலும் கணவன் மனைவிக்குள் ஒத்துப்போகாவிடில் விவாகரத்து தாக்கல் செய்யலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.