பொதுக்குழுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து, இபிஎஸ்-க்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து, அவர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு விரைந்துள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.