
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட நாராயணதாஸ் வீதியில் திருட்டு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு வசிக்கும் 9-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், தனது பெற்றோர் வாங்கி கொடுத்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிளில் நேற்று மதியம் அருகிலுள்ள கடைக்குச் சென்றார்.
பின்னர் வீடு திரும்பும் வழியில், ஒரு பெண் அருகில் உள்ள கடையில் தனது கைப்பை (பர்ஸ்) தொலைந்துவிட்டதாக கூறி, “உன் சைக்கிளை கொடுத்து சற்று நேரம் உதவி செய், பர்ஸை எடுத்து வந்துவிடுகிறேன்” என கேட்டுள்ளார். மாணவன் அதை நம்பி சைக்கிளை அந்த பெண்ணிடம் ஒப்படைத்தார்.
ஆனால் வெகு நேரமாகியும் அந்த பெண் திரும்பி வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவன், தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் பெருங்களாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.