தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்த்து மத்திய வங்க கடலில் மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனைப் போல நீலகிரி, ஈரோடு, சேலம் நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.