தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. 500 டாஸ்மாக்  கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் மூடப்பட உள்ள 500 டாஸ்மாக் கடைகளை கண்டறியும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் அடிப்படையில்  50 மீட்டர்களுக்கு இடையே இருக்கக் கூடிய கடைகள், வருவாய் குறைந்த கடைகள், பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகள், கோயில்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. அதன் முடிவில் மூடல் நடவடிக்கைகள் தொடங்க இருக்கின்றன. இதன்படி விரைவில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.