
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது.
அதாவது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மே 16ஆம் தேதி அதாவது இன்று பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இதேபோன்று இன்று தேதி 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 9 மணி அளவில் 10-ம் வகுப்பு ரிசல்ட் வெளியாகிறது. இதைத்தொடர்ந்து மதியம் 2 மணியளவில் 11 ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியாக இருக்கிறது.
மேலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதள முகவரிகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கும் குறுஞ்செய்தி வாயிலாக மதிப்பெண் பட்டியல் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.