தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்றும் 40 முதல் 50 கிலோமீட்டர் தரைக்காற்று வேகத்துடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகளில் அதிதீவிர கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நெல்லை மாவட்டம் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், திண்டுக்கல் மற்றும் திருப்பூரில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.