ஐபிஎல் 2025 எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில், டாஸ் மையத்தில் நடந்த ஒரு சம்பவம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பாண்ட்யா, குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக விளையாடிய ஷுப்மன் கில்-விடம் கைபிடிக்க முயன்றார். ஆனால் கில் அவரை பொறுப்பில்லாமல் தவிர்த்ததாக காட்சிகள் வெளியாக, இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சம்பவம் நேரில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதால், ஹார்திக் பாண்ட்யா கை நீட்ட, கில் அவரை கண்டுக்காமல்செல்லும் காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இது இருவருக்கும் இடையே ஏற்கனவே உள்ள மனப்போரின் காட்டுவதாகபலர் கருதினர். “கில் இப்படி செய்ய வேண்டாமா?”, “இருவருக்கும் இடையில் ஏற்கனவே சனி-சந்திரன் இருக்குதா?” என ரசிகர்கள் கேள்விகள் எழுப்பினர். டாஸ் நிகழ்வில் இப்படி ஒரு பதற்றம் தோன்றியது, போட்டியைவிட ரசிகர்கள் இந்த சம்பவம் குறித்தே அதிகமாக பேசினர்.

 

மும்பை அணிக்காக முன்னாள் கேப்டனாக விளையாடிய ஹார்திக் பாண்ட்யா, இந்த சீசனில் மீண்டும் அந்த அணிக்கு திரும்பினார். அவரை எதிர்கொண்டு கில்  குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதும்தான், இருவருக்கும் இடையிலான புதிய போட்டி மனப்பான்மைக்கு அடிப்படை வைத்திருக்கலாம். தற்போது வைரலாகும் இந்த வீடியோவால், ஹார்திக்-கில் இடையே உண்மையில் ஏதாவது குழப்பம் உள்ளதா என்பது குறித்தும், எதிர்காலத்தில் இதுபற்றி விளக்கமொன்றும் வருமா என்பதற்கும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் குஜராத்தை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.