
ஒடிசாவை சேர்ந்த சிறுமியை கினு கிஷான் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமி தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கிஷானை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் ஜாமினில் வெளியே வந்தார். அதன்பிறகும் கோபம் தீராது தன் மீது புகார் அளித்த சிறுமியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பின்னர் சிறுமியின் உடலை துண்டு, துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளார். சிறுமி காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்திய போது கிஷான் பலாத்கார வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக சிறுமியை கடத்தி கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.