
பிரபல பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல், தனது X கணக்கு ஹேக் செய்யப்பட்ட இரு மாதங்களுக்கு பிறகு மீட்டெடுத்துள்ளார். வீடியோவொன்றின் மூலம் தனது ரசிகர்களிடம் இந்த தகவலை பகிர்ந்த ஷ்ரேயா, தன்னுடைய கணக்கை மீட்டெடுக்க X ஆதரவு குழுவை தொடர்புகொள்ள கடுமையாக போராட வேண்டி இருந்தது என தெரிவித்துள்ளார். இந்திய குழுவில் ஒருவரின் உதவியால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது என அவர் நன்றியுடன் கூறினார். மேலும் X தளத்தில் தன்னைப்பற்றி போலியான தலைப்புகள் மற்றும் ஏ.ஐ உருவாக்கிய படங்களை கொண்ட தவறான விளம்பரங்கள் பரவுவதையும், அவை மோசடி இணையதளங்களுக்கு வழிவகுக்கும் எனக் கூறி ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதையும் வலியுறுத்தினார்.
I am back!! I will be talking and writing here often..
Yes my X account has been in trouble as it got hacked in February. Now I have finally had the help from the @X team after lot of struggles in establishing a proper communication. All is well!! Now I am here.Also, there are… pic.twitter.com/jdgTUjWAui
— Shreya Ghoshal (@shreyaghoshal) April 6, 2025
இந்த பிரச்சனையை சந்தித்த ஒரே பிரபலமாக ஷ்ரேயா இல்லை என்றும், ஏராளமான பிரபலங்கள் இதே புகாரை முன்வைத்தும், X தளம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். “இந்த போலி விளம்பரங்களை அகற்ற எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது X-இன் விளம்பரக் கொள்கைகளுக்குள் வருகிறது. விரைவில் இதற்கான தீர்வு எடுக்கப்படும் என நம்புகிறேன்,” என அவர் கூறினார். ஷ்ரேயா தனது X கணக்கு ஹேக் செய்யப்பட்டதைக் குறித்து மார்ச் 1ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார். தற்போது மீண்டும் தனது கணக்குடன் இணையம் கொண்டாடும் ரசிகர்கள், அவரது மீட்பு குறித்து மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர்.