
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் மீதான ஒரு முக்கிய வழக்கை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதாவது இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக கூறிய கடந்த 2010 ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு சீமான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பிறகு வழக்கில் முன்னேற்றம் இல்லை. இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சீமான் மீதான அந்த வழக்கை மீண்டும் விரைந்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் இது சீமானுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.