
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அடிலாபாத் மாவட்டத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபர் சிறுமியிடம் பாசமாக பேசிய அவரை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த கிராம மக்கள் ஒன்றாக திரண்டு இந்த வாலிபரின் வீட்டிற்கு சென்றனர். இதனை அறிந்த வாலிபர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி கொண்டார்.
அவரை வெளியே வருமாறு கிராம மக்கள் கூச்சலிட்டும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் வாலிபர் உள்ளே இருக்கும்போதே கிராம மக்கள் வீட்டிற்கு தீ வைத்தனர். இதனால் அந்த வாலிபர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதுபற்றி அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.