பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஷில்பா செட்டி. இவர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஹிந்தி சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 48 வயது ஆகிறது. இவர் மும்பையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் நடிகை ஷில்பா ஷெட்டி தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார் இது குறித்து அவர் கூறியதாவது, என்னுடைய திரைப்பட வாழ்க்கையில் ஆரம்ப கட்டத்தில் தயாரிப்பாளர்களிடமிருந்து பல நிராகரிப்பு மற்றும் அவமானங்களை சந்தித்தேன்.

இதனால் நான் மனச்சோர்வும் ஏமாற்றமும் அடைந்தேன். நான் கல்லூரி முடித்த பிறகு என் தந்தையுடன் சேர்ந்து வேலை பார்க்க விரும்பினேன். அந்த சமயத்தில் ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சியை  பார்ப்பதற்கு என் தந்தையுடன் சென்றேன். அப்போது ஒரு புகைப்பட கலைஞர் என்னை போட்டோ எடுத்தார். அதன் மூலம் நான் ஃபேஷன் துறைக்கு அறிமுகமானேன். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கையே மாறிவிட்டது. நான் நடிக்க வந்த போது எனக்கு 17 வயது. அப்போது நான் உலகத்தை பார்க்கவில்லை.

எனக்கு ஹிந்தி தெரியாததால் கேமரா முன் நிற்பதற்கு பதட்டமாக இருந்தது. அதன் பிறகு முயற்சி செய்து நடித்து பிரபலமானேன். பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதற்கு என்னுடைய போராடும் குணம்தான் காரணம். நான் தற்போது ஒரு வலிமையான மற்றும் சுதந்திரமான பெண்ணாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை ஷில்பா செட்டிக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருக்கும் நிலையில் சொந்தமாக ஜெட் விமானம் ஒன்றும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.