தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நடிகர்கள், நாடக கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்டுவதற்கு  40 கோடி ரூபாய் கடன் பெற பொதுச்செயலாளர் விஷால் ஒப்புதல் கோரினார். தொடர்ந்து நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் கோடி கோடியாய் ஊதியம் வாங்குகிறீர்கள் நீங்களே நடிகர் சங்க கட்டத்தை கட்ட முடியாதா? என நடிகர் செந்தில் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், “கலை நிகழ்ச்சி, ஸ்டார் கிரிக்கெட் என டிக்கெட் போட்டு வசூலித்தது போதும். 40 கோடியை டாப் 10 நடிகர்களே தந்து விட முடியும். கடன் வாங்க வேண்டிய அவசியமென்ன?” என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.