
புதுநல்லூர் பகுதியில் மீன் வியாபாரியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 23ஆம் தேதி கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் ஜெயந்தி கொதிக்கும் எண்ணெயை தனது கணவர் மீது ஊற்றியுள்ளார்.
இதனால் படுகாயம் அடைந்த ரவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெயந்தியை கைது செய்தனர். இந்த நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.