வேலூர் மாவட்டம் கோடியூர் பாலாபுரத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (30). இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற ஏகாம்பரம் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.

இந்த நிலையில் பொன்னை அணைக்கட்டு அருகே சாலையோரம் கை, கால்கள், கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் ஏகாம்பரம் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று ஏகாம்பரத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஏகாம்பரத்தை கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.