கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் யஷ். இவர் கேஜிஎப் படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் நடிப்பில் வெளிவந்த கேஜிஎப் 2 திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் சாதனை புரிந்தது. இதன் காரணமாக நடிகர் யஷ்ஷின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது.

இந்நிலையில் இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் போன்ற படங்களை இயக்கிய பிரபல தமிழ் இயக்குனர் பிஎஸ் மித்ரன் நடிகர் யஷ்ஷுக்கு கதை சொல்லியுள்ளதாக தற்போது புது தகவல் வெளிவந்துள்ளது. இந்த கதை நடிகர் யஷ்ஷுக்கும் பிடித்து விட்டதால் அவரும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.