
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 போட்டி மீண்டும் மே 17ஆம் தேதி தொடங்கவுள்ளதாக BCCI அறிவித்துள்ளது. தொடக்க ஆட்டமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், RCB அணியின் நட்சத்திர வீரரான டிம் டேவிட், பெங்களூருவில் பெய்த கடும் மழையில் ரசித்து விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெகுவாக வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், டிம் டேவிட் ஸ்டேடியத்தில் பரப்பப்பட்ட கவர் மீதே சறுக்கிக்கொண்டு மழையை ரசிக்கிறார், அதை RCB தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Tim David ❌
Swim David ✅Bengaluru rain couldn’t dampen Timmy’s spirits… Super TD Sopper came out in all glory. 😂
This is Royal Challenge presents RCB Shorts. 🩳🤣#PlayBold #ನಮ್ಮRCB #IPL2025 pic.twitter.com/PrXpr8rsEa
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 16, 2025
இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் “RCB வீரர்களின் மனநிலை மழையிலும் உற்சாகமாகவே இருக்கிறது” என பதிவிட்டுள்ளனர். IPL மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், ரசிகர்கள் புதிய ஆட்டங்களை எதிர்பார்த்து உள்ளனர். IPL நிர்வாகம் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்ட கால அட்டவணையை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. எல்லைப் பதற்றம் காரணமாக ஏற்பட்ட தாமதம் தொடர்ச்சியான போட்டிகளால் சமநிலைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.