தர்மபுரி மாவட்டம் தொப்பையாறு அணை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக நிரம்பி உள்ளது. தற்போது வெயில் சுட்டெரிப்பதால் நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது. மேலும் விவசாயத்திற்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நேற்று முன்தினம் தொப்பூர் பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் உமியம்பட்டி அருகே கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் பெண்களை கேலி செய்துள்ளனர். உடனே அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாலிபர்களை கண்டித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது போதையில் வாலிபர்கள் பெண்களை ஆபாசமாக பேசியுள்ளனர். இதனால் அந்த வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் கால்வாயில் குளிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்