
ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் வெங்கட்ரமணா-லட்சுமி தம்பதியினர். இவர்கள் நில மங்கலம் பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் லட்சுமி குளிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் குளியல் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த வெங்கடேஸ்வரா குளியல் அறை கதவை தட்டியுள்ளார். ஆனால் எந்த சத்தமும் இல்லை. லட்சுமியும் கதவை திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முகத்தில் மர்மமான காயங்களுடன் லட்சுமி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். லட்சுமி எப்படி இருந்தார் என்பது தெரியவில்லை. அவரது முகத்தில் மர்மமான காயங்கள் இருந்ததற்கான காரணமும் தெரியவில்லை. இதுகுறித்து வெங்கட்ரமணா கூறும் போது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. காலை 9.30 மணிக்கு நாங்கள் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போதுதான் என் மனைவி குளிப்பதற்கு சென்றார். 9.50 மணிக்கு நான் அவரை காணவில்லை என குளியல் அறைக்கு சென்று பார்த்தேன். அங்கு அவர் இறந்து கிடந்தார். எல்லாமே மர்மமாக உள்ளது. நாங்கள் போலீசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். என் மனைவி இறந்ததற்கான காரணம் தெரிய வேண்டும் என வெங்கடேஸ்வரா கூறியுள்ளார்.