
ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் சட்ட கல்லூரியில் 20 வயதுடைய மாணவி படித்து வருகிறார். திடீரென அந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை தனது மகளை காப்பாற்றி விசாரித்துள்ளார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விசாகப்பட்டினத்தை சேர்ந்த வம்சி என்பவரும் இந்த மாணவியும் காதலித்தனர். இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து பேசி உள்ளனர். ஒருமுறை மாணவியுடன் தனிமையில் இருந்த போது வம்சி அதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோவை தனது நண்பர்கள் மூன்று பேரிடம் காண்பித்துள்ளார். அதனைப் பார்த்த நண்பர்கள் தங்களும் மாணவியுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என கூறினர். அதற்கு வம்சியும் சம்பந்தம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வம்சி மாணவியை விசாகப்பட்டினத்தில் இருக்கும் கிருஷ்ணா நகரில் உள்ள தனது நண்பன் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து மாணவியும் வம்சியும் நெருக்கமாக இருந்தனர்.
அதை அவரது நண்பர்கள் என்று வீடியோவாக எடுத்தனர். திடீரென உள்ளே வந்த நண்பர்களை கண்டு மாணவி அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு அந்த வீடியோவை காட்டி நான்கு பேரும் சேர்ந்து மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் மாணவி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இது குறித்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வம்சி உள்பட்ட நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.