ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் புத்தாண்டை முன்னிட்டு தனது காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் புத்தியேந்தல் என்ற பகுதியில் காதலர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த 4 பேர் இங்கு என்ன செய்கிறீர்கள்? என கேட்டு காதலர்களை மிரட்டி தாக்கியுள்ளனர். மேலும் காதலனை அங்கிருந்து விரட்டிவிட்டு இளம் பெண்ணை மறைவான இடத்திற்கு கடத்தி சென்று நான்கு பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் புவனேஷ் குமார்(27), குட்டி(25), செல்வகுமார்(27), சரண் முருகன்(29) ஆகிய வாலிபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 10-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.