
மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இந்த மருத்துவமனையில் ஒரே குழந்தையின் சடலத்தை ஒரு நாய் கடித்து சிதைத்துள்ளது.
கழிவறையின் அருகே அந்த நாய் குழந்தையை கவ்வி கொண்டு சென்றதை மருத்துவமனை ஊழியர் ஒருவர் பார்த்த நிலையில் அதனை ஒரு வழியாக மீட்டனர். அப்போது குழந்தையின் சடலம் பாதி அளவுக்கு சிதைந்த நிலையில் கிடந்தது.
பின்னர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது ஒரு 17 வயது பெண் கழிப்பறையில் பிரசவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறியது தெரியவந்தது. பின்னர் அவர் குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு வேறொரு நபருடன் வெளியேறிவிட்டார்.
அந்த குழந்தை பிறந்து இறந்ததா அல்லது உயிரோடு இருக்கும்போதே இப்படி செய்து விட்டாரா அந்த பெண் என்பது தெரியவில்லை. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.