நடிகர் விஜய் சினிமாவை தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே  பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து வருகிறது. அதன் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களுடைய சிலைக்கு மரியாதை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் 10, +2 பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களை இன்று  நடிகர் விஜய் சந்திக்க உள்ளார். சென்னை நீலாங்கரையில் நடைபெறும் இந்த விழாவில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் நடிகர் விஜய் பேசியதாவது “படிப்பை தவிர்த்து பார்த்தால் குணம், சிந்தனை திறன் மட்டுமே மாணவர்களுக்கு எஞ்சியிருக்கும். பணத்தை இழக்கலாம், குணத்தை இழக்கக்கூடாது. பெற்றோர் கண்காணிப்பில் இருந்து வெளியே போகும் போது கிடைக்கும் சுதந்திரத்தை சரியாக பயன்படுத்துங்கள் என்று நடிகர் விஜய் பேசினார்.