நடிகை கீர்த்தி பாண்டியன் தன்னுடைய பிறந்தநாளை தனித்தீவு ஒன்றில் கொண்டாடப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கீர்த்தி பாண்டியனுக்கும் அசோக் செல்வனுக்கும் கடந்த பிப்ரவரி பதினெட்டாம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் ஒருவருக்கு ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

சமீபத்தில் இவர்கள் ஜோடியாக நடித்த ப்ளூ ஸ்டார் படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. என்னதான் படத்தில் பிசியாக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். இப்பொழுது காதலர்தினம் மற்றும் கீர்த்தியின் பிறந்தநாள் இது இரண்டையும் கொண்டாடுவதற்காக தாய்லாந்து சென்றுள்ள புகைப்படத்தை கீர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Keerthi Pandian (@keerthipandian)