மதுக்கடைகளை 100 சதவீதம் மூடும் தைரியம் திராவிட கட்சிகளுக்கு இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய அவர், இந்தியாவின் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு அரசு மட்டும் ரூ.12.5 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது. விரைவில் அரசு திவாலாகிவிடும்.

நெய்வேலியில் நெற்பயிர்கள் அழிக்கப்படுவதை கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த சொல்லியிருப்பார். இன்னும் 3 ஆண்டுகளில் தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.