கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் மூலமாக நடித்து பிரபலமானவர்தான் நடிகர் ஐயப்பன் உன்னி. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும்  கயல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஐயப்பனின் மனைவி பிந்தியா கயல் சீரியலால் தன்னுடைய வாழ்க்கையை சீரழிந்து விட்டதாக குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.  அதாவது கடந்த மூன்று வருடங்களாக பிள்ளையை பார்த்துக் கொள்ள முடியாது என்றும் சைகை போல நடந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து தன்னுடைய கணவர் போதை பொருள் பயன்படுத்திவிட்டு வீட்டில் வந்து சண்டை போடுகிறார் என்றும் என் புருஷனை இந்த சீரியலில் இருந்து எடுத்துருங்க. சில மாதங்களை வீட்டிற்கே வரவில்லை என்றும் கூறியுள்ளார்.  இதனையடுத்து பிந்திய கயல் ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் தன்னுடைய மகளுக்கும், தனக்கும் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும்  மீண்டும் தன்னுடைய கணவர் தனக்கு வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து சூட்டிங் நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.