கடந்த 2014-ம் வருடம் பொறியாளன் எனும் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை கயல் ஆனந்தி. இதையடுத்து அவர் நடித்த கயல் படம் வாயிலாக மிகவும் பிரபலமானார். மேலும் த்ரிஷா இல்லனா நயன்தாரா, சண்டிவீரன், பரியேறும் பெருமாள் உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். தற்போது தமிழில் ‘மங்கை’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவர் தைரியமான காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ஸ்கிரிப்டைக் கேட்டபோது, ​​இந்த படங்களில் மிகவும் தைரியமான காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதால் என்னால் நடிக்க முடியாது என்று கூறினார். கணவரின் ஊக்கத்தால் தான் இந்தப் படத்தில் நடிக்க முடிந்தது என்றார்.