கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில், வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த வேளையில், தரையில் இருந்த ஒப்பந்ததாரர் ஒருவர் தைரியமாக அவரைப் பிடித்து உயிரைக் காப்பாற்றிய அதிர்ச்சி சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை நடந்தது. இந்த அபாயகரமான தருணம், அங்கு அமைந்திருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சங்கர் என்ற தொழிலாளி, மேலும் நான்கு பேருடன் சேர்ந்து ஒரு வீட்டு கான்கிரீட் விதானத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென நிலைதவறி கீழே விழுந்தார். அப்போது கணேஷ் என்ற ஒப்பந்ததாரர் தரையில் இருந்தபடியே கீழே விழுந்த  சங்கரைக் கவனித்து, தனது கைகளால் அவரைப் பாதுகாப்பாக பிடித்தார். இருவரும் அருகில் இருந்த கட்டுமானப் பொருட்கள் மீது விழுந்தனர். இந்த சம்பவத்தில் சங்கருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. ஆனால், ஏற்கனவே முதுகுவலியால் துணைப் பெல்ட் அணிந்திருந்த கணேஷுக்கு, வலது காலில் லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்டது.

https://embed.indiatoday.in/share/video/embed/2496310:32

இந்த சம்பவம் நடந்த பிறகும், சங்கர் மீண்டும் வேலைக்கு திரும்பி முழு நாள் வேலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 25 ஆண்டுகளாக கட்டுமானத் துறையில் பணியாற்றும் கணேஷும், அவருடன் 24 ஆண்டுகளாக வேலை செய்த சங்கரும், இத்தகைய மோசமான தருணத்தில் பரஸ்பர நம்பிக்கையும் அனுபவமும் கொண்டு உயிரைக் காப்பாற்றினர் எனக் கூறலாம். இந்த சம்பவத்திற்குப் பிறகு கணேஷ் கூறியதாவது, “எனது உள்ளுணர்வின் அடிப்படையில் செயல்பட்டேன். இருவரும் பெரிய அபாயத்திலிருந்து தப்பியமைக்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்” என தெரிவித்தார்.